​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் தங்க நகை, ரூ. 2 லட்சம் கொள்ளை

Published : Mar 29, 2024 4:03 PM

பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் தங்க நகை, ரூ. 2 லட்சம் கொள்ளை

Mar 29, 2024 4:03 PM

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தென்னிந்தியாலம் பகுதியை சேர்ந்த சிட்டிபாபு என்ற போக்குவரத்து துறை உதவி பொறியாளர் தனது உறவினரின் துக்க நிகழ்வுக்கு குடும்பத்துடன் சென்னை சென்றிருந்த நிலையில், பட்டபகலில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மூன்று நபர்கள் நோட்டமிட்டு வீட்டின் கேட் மற்றும் கதவு உடைத்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியிருந்ததைக் கொண்டு போலீசார் விசாரித்துவருகின்றனர்.