​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை செக்மெட் கிளப்பில் ஊழியர்கள் உயிரிழந்த நிலையில் மதுபான விடுதிக்கு போலீசார் சீல்

Published : Mar 29, 2024 12:35 PM

சென்னை செக்மெட் கிளப்பில் ஊழியர்கள் உயிரிழந்த நிலையில் மதுபான விடுதிக்கு போலீசார் சீல்

Mar 29, 2024 12:35 PM

சென்னை ஆழ்வார்பேட்டை செக்மெட் கிளப்பில் நேற்று இரவு மேற்கூரையின் ஒரு பகுதி இடித்து விழுந்ததில் 3 ஊழியர்கள் உயிரிழந்த நிலையில், அந்த மதுபான விடுதிக்கு போலீசார் சீல் வைத்தனர்.

பலியான மூவரில் ஒருவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த 4 பெண் குழந்தைகளுக்கு தகப்பனான சைக்ளோன்ராஜ் என்பதும், மேலும் இருவர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார் விடுதி மேலாளர் சதீஷ் கைது செய்ததுடன், தலைமறைவாக உள்ள உரிமையாளர் அசோக்குமாரை தேடிவருகின்றனர்.

கட்டடத்தின்மேற்பகுதியில் விதிகளை மீறி நடந்த கட்டுமானம் விபத்துக்கு காரணமா? என்பதை கண்டறிய வல்லுனர் குழு ஒன்றை அமைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.