​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென் ஆப்ரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்து 165 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த பேருந்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 வயது சிறுமி

Published : Mar 29, 2024 8:02 AM

தென் ஆப்ரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்து 165 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த பேருந்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 வயது சிறுமி

Mar 29, 2024 8:02 AM

ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைக்காக தென் ஆப்ரிக்கா சென்றவர்கள் பயணித்த பேருந்து 165 அடி ஆழ பள்ளத்தில் விழுந்ததில் 45 பேர் உயிரிழந்தனர். அண்டை நாடான போட்ஸ்வானாவில் இருந்து 46 பேர் தென் ஆப்ரிக்காவின் மோரியா நகரில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுள்ளனர்.

லிம்போபோ மாகாணத்தில் உள்ள மலைப்பாதையில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் வழியாக பேருந்து சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. 8 வயது சிறுமியை தவிர பேருந்தில் சென்ற 45 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்