​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தலுக்குப் பின் ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி

Published : Mar 28, 2024 4:29 PM

தேர்தலுக்குப் பின் ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி

Mar 28, 2024 4:29 PM

புதுச்சேரியில் 7 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட ரேஷன்கடைகள் மக்களவைத் தேர்தலுக்குப் பின் மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கூறினார். புதுச்சேரி பா.ஜ.க. வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலியார்பேட்டையில் வாக்கு சேகரித்த அவர் இதனை தெரிவித்தார்.

உணவுப் பொருள் வீணாவதைத் தவிர்க்கும் வகையில் கடந்த 7 ஆண்டுகளாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைகளுக்கு மாதம் 600 ரூபாயும், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள அட்டைகளுக்கு தலா 300 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.