​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கரூர் வேட்பாளர் ஜோதிமணியிடம் இவ்வளவு நாளா நீங்கள் வரவே இல்லை.. கேள்வி எழுப்பிய பெண்

Published : Mar 28, 2024 1:00 PM

கரூர் வேட்பாளர் ஜோதிமணியிடம் இவ்வளவு நாளா நீங்கள் வரவே இல்லை.. கேள்வி எழுப்பிய பெண்

Mar 28, 2024 1:00 PM

இந்தியா கூட்டணியின் கரூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஜோதிமணிக்கு கோடங்கிபட்டியில் ஆரத்தி எடுத்த பெண்களில் ஒருவர் இவ்வளவு நாளா நீங்கள் வரவே இல்லை என தைரியமாக கேள்வி எழுப்பினார்.

அப்போது, தான் வந்து கொண்டு தான் இருக்கிறேன் என்றும், பாலம் கட்ட டெண்டர் நோட்டீஸ் கொண்டு வந்திருப்பதாகவும், அதன் நகலை அப்பெண்ணிடம் வழங்கி சமாளித்தார்.

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபட்டி சந்திப்பில் நிகழ்ந்த விபத்துக்களில் சுமார் 3000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்துக்களை தடுக்கும் வகையில் ஒன்றரை ஆண்டுக்குள் புதிய பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

முன்னதாக கோடங்கிபட்டி அருள்மிகு பட்டாளம்மன் கோவிலில் வழிபாடு நடத்தி பிரச்சாரத்தை தொடங்கினார்.