​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கியாஸ் சிலிண்டரை விற்று மது அருந்திய மகனை கொலை செய்த தாய்...

Published : Mar 17, 2024 6:02 PM



கியாஸ் சிலிண்டரை விற்று மது அருந்திய மகனை கொலை செய்த தாய்...

Mar 17, 2024 6:02 PM

சென்னை மேற்கு மாம்பலத்தில், கியாஸ் சிலிண்டரை விற்று மது குடித்து விட்டு தகராறு செய்த மகனை கொலை செய்ததாக அவரது தாய் கைது செய்யப்பட்டார்.

வீட்டில் இறந்து கிடந்த 40 வயது வெங்கேடஷின் உடற்கூராய்வு அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததால் அவரது தாயாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஒழுங்காக வேலைக்குச் செல்லாததை கண்டித்த தாயை, மது போதையில் மகன் தாக்கியதால் பதிலுக்கு கட்டையால் அடித்து கழுத்தை நெரித்ததில் அவர் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.