​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவுக்கு லாரியில் அடைத்து கொண்டுசெல்லப்பட்ட 22 மாடுகள் மீட்பு

Published : Mar 17, 2024 10:30 AM

கேரளாவுக்கு லாரியில் அடைத்து கொண்டுசெல்லப்பட்ட 22 மாடுகள் மீட்பு

Mar 17, 2024 10:30 AM

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வாங்கப்பட்டு கேரளாவுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் லாரியில் அடைத்து கொண்டுசெல்லப்பட்ட 22 மாடுகளை போலீஸார் மீட்டு கோசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் இந்த லாரி பிடிபட்டது. ஒரு மாடு இறந்துபோன நிலையில், லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார், மாடுகளை ஏற்றிவந்த கேரளாவைச் சேர்ந்த மூன்று பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.