​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலை நடுவே பைக்கை நிறுத்தி அட்டகாசம் செய்த குடிமகன்.. நீண்ட நேரம் காவல்துறையினர் வராததால் பொதுமக்கள் அவதி

Published : Mar 17, 2024 6:56 AM

சாலை நடுவே பைக்கை நிறுத்தி அட்டகாசம் செய்த குடிமகன்.. நீண்ட நேரம் காவல்துறையினர் வராததால் பொதுமக்கள் அவதி

Mar 17, 2024 6:56 AM

ஆரணி சேவூர் பைபாஸ் சாலையில் உச்சகட்ட போதையில் வாகனங்களை மடக்கி அலப்பறை செய்த குடிமகனை பிடிக்க போலீசார் வராததால் பொதுமக்கள் சலிப்படைந்தனர்.

வாகன ஓட்டிகள் தட்டி கேட்ட போது சாலையில் இருந்த கருங்கல்லை எடுத்து அடிக்க வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அங்கிருந்து நகர்ந்தனர்.

பைபாஸ் கூட்ரோடு அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த குடிமகன் சாலையில் நடுவில் நிறுத்தி விட்டு பின்னால் வந்த பள்ளி வாகனத்தை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலப்பறையை ஆரம்பித்தார். காவலர்கள் யாரும் இறுதிவரையில் வராததால் ஆரணி வேலூர் பைபாஸ் சாலையில் போக்குவரத்து சுமார் ஒருமணி நேரம் பாதிக்கப்பட்டது.