​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பூனை தள்ளிவிட்டு சிறுவனின் கழுத்தில் குத்திய கத்தரிக்கோல்... மறுவாழ்வு அளித்த மருத்துவர்கள்

Published : Mar 16, 2024 7:48 PM

பூனை தள்ளிவிட்டு சிறுவனின் கழுத்தில் குத்திய கத்தரிக்கோல்... மறுவாழ்வு அளித்த மருத்துவர்கள்

Mar 16, 2024 7:48 PM

சென்னை கோயம்பேட்டில் உள்ள வீடு ஒன்றில் பரணில் வைக்கப்பட்ட பூமாலை வெட்டும் கத்தரிக்கோலை, பூனை தள்ளிவிட்டதால் , 10 அடி உயரத்தில் இருந்து விழுந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தில் குத்தியது.

இரத்தம் வெளியேறி வலியால் துடித்த சிறுவனை மீட்ட பெற்றோர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், சிறுவனின் பின் பக்க மூளைக்கு செல்லும் இரத்த குழாயில், அதிக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டனர்.

இரத்த நாள நுண்துளை அறுவை சிகிச்சை துறை மருத்துவர் குழுவினர் உடனடியாக செயல்பட்டு Covered Stunt பொருத்தி, சுமார் 3 மணி நேர தொடர் அறுவை சிகிச்சைக்கு பின்னர், சிறுவனை காப்பாற்றி உள்ளனர்.