​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடையின் பூட்டை உடைத்து 200,ரூபாய் கொள்ளை அடித்துவிட்டு ரயிலில் தப்பிச்சென்ற நபர்,கிண்டி ரயில் நிலையம் அருகே உயிரிழந்த சம்பவம்

Published : Mar 16, 2024 9:31 AM

கடையின் பூட்டை உடைத்து 200,ரூபாய் கொள்ளை அடித்துவிட்டு ரயிலில் தப்பிச்சென்ற நபர்,கிண்டி ரயில் நிலையம் அருகே உயிரிழந்த சம்பவம்

Mar 16, 2024 9:31 AM


சென்னையில், நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து 200 ரூபாய் திருடிச் சென்ற மர்ம நபர், கிண்டி ரயில் நிலையத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்.

முரளிதரன் என்பவர் தாம் பழவந்தாங்கலில் நடத்திவரும் நிதி நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு 200 ரூபாய் திருடப்பட்டிருந்ததாக காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

கடை முழுக்க ரத்தம் சொட்டி இருந்ததால், ரத்த கறைகளை பின் தொடர்ந்தபடி பழவந்தாங்கல் ரயில் நிலையத்தை அடைந்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட நபர் ரயிலில் சென்றிருக்கலாம் என நினைத்து ரயிலில் சென்றபோது, கிண்டி ரயில் நிலையத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இளைஞரை சென்றடைந்தனர். அவர் யார் என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.