​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா கைது

Published : Mar 16, 2024 7:31 AM

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா கைது

Mar 16, 2024 7:31 AM

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டநிலையில், இந்த மோசடியில் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஐதராபாத்தில் உள்ள வீட்டில் 5 மணி நேரம் சோதனை நடத்தியபின், கவிதாவை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் செய்ததாகத் தெரிவித்த அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

கவிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானாவில் போராட்டத்துக்கு பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.