​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published : Mar 15, 2024 5:16 PM

உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Mar 15, 2024 5:16 PM

ஊசி மருந்து செலுத்தி தர்பூசணி பழுக்க வைக்கப்படுவதாகவும் அப்படி செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிட்டு தமக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தில் 1196 செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிய அவர், சுற்றுலாத் தலங்களில் கலப்பட மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்படுவதை தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.