​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மணல் திருட்டை தடுத்து குற்றவாளிகளை கைது செய்ய கோரி தர்ணாவில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி சின்ராஜ்

Published : Mar 12, 2024 5:49 PM

மணல் திருட்டை தடுத்து குற்றவாளிகளை கைது செய்ய கோரி தர்ணாவில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி சின்ராஜ்

Mar 12, 2024 5:49 PM

நாமக்கல் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் மணல் திருட்டை தடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி சின்ராஜ் பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

அப்போது  போலீசார்  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர் என தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு நிலவியது.