​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போதைப் பொருள்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம்

Published : Mar 12, 2024 4:50 PM

போதைப் பொருள்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம்

Mar 12, 2024 4:50 PM

போதைப் பொருள்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கரூர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.

சேலத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுகவினர் திரளானோர் பங்கேற்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையேற்று மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினார்.

விழுப்புரத்தில் மனித சங்கிலி போராட்டத்தை தலைமையேற்று நடத்திய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக அரசை கண்டித்து பேசினார்.

 காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் அதிமுகவினர் கருப்பு சட்டை மற்றும் பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.