​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் போதைப்பொருள் மாநிலமாக மாறி உள்ளது : எடப்பாடி பழனிசாமி

Published : Mar 12, 2024 4:16 PM

தமிழகம் போதைப்பொருள் மாநிலமாக மாறி உள்ளது : எடப்பாடி பழனிசாமி

Mar 12, 2024 4:16 PM

பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்களை கடந்த 10 நாட்களில் மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ள நிலையில், தமிழகக் காவல்துறை கும்பகர்ணன் போன்று தூக்கத்தில் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

போதைப்பொருள் புழக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற பின் பேட்டி அளித்த இபிஎஸ், தமிழகம் போதைப்பொருள் மாநிலமாக மாறி உள்ளது என்றார்.