​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புனித ரமலான் மாதம் தொடங்கியது... சிறப்பு தொழுகை நடத்தி நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள்

Published : Mar 12, 2024 10:46 AM

புனித ரமலான் மாதம் தொடங்கியது... சிறப்பு தொழுகை நடத்தி நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள்

Mar 12, 2024 10:46 AM

புனித ரமலான் மாதம் தொடங்கியதையடுத்து பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகையுடன் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடிக்க துவங்கினர்.

மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் உள்ள சுல்தான் அவுலியா தர்காவில் நோன்பு கடைபிடிக்க தொடங்கிய இஸ்லாமியர்களுக்கு முன்னதாக பசுமை நண்பர்கள் சார்பாக சகர் உணவு வழஙகப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள பழமையான ஜாமியா பள்ளிவாசலில் திரளான இஸ்லாமியர்கள் அதிகாலை சிறப்பு தொழுகை நடத்தி நோன்பினை துவக்கினர்.