​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூலித் தொழிலாளியின் வீட்டில் பணம் நகைகளை கொள்ளையடித்த நபருக்கு போலீசார் வலைவீச்சு

Published : Mar 12, 2024 7:29 AM

கூலித் தொழிலாளியின் வீட்டில் பணம் நகைகளை கொள்ளையடித்த நபருக்கு போலீசார் வலைவீச்சு

Mar 12, 2024 7:29 AM

ராணிப்பேட்டை அருகே கீழ் மின்னல் கிராமத்தில் கூலித் தொழிலாளியின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 15 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தன் அவர் மனைவி ராஜகுமாரி ஆகியோர் கட்டிட கூலித் தொழில் செய்து வருகின்றனர்.

இருவரும் வீட்டினை பூட்டிவிட்டு சென்ற நிலையில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு  போலீசாரிடம் புகார் அளித்தனர்