​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி வங்கி தொடங்கி ரூ 50 கோடி சுருட்டிவிட்டதாக எஸ்.எம்.சி. வங்கி ஊழியர்கள் மதுரை காவல் ஆணையரிடம் புகார்

Published : Mar 11, 2024 10:01 PM

போலி வங்கி தொடங்கி ரூ 50 கோடி சுருட்டிவிட்டதாக எஸ்.எம்.சி. வங்கி ஊழியர்கள் மதுரை காவல் ஆணையரிடம் புகார்

Mar 11, 2024 10:01 PM

திருச்சியை சேர்ந்த விஜய் என்பவர் மதுரையில் சினேகா மல்டிஸ்டேட் கோ- ஆப்ரேடிவ் ஹவுஸ் பில்டிங் சொசைட்டி என்ற போலி வங்கியை தொடங்கி 50 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கூறியுள்ளனர்.

தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, உள்ளிட்ட இடங்களில் கிளைகள் தொடங்கி, பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் பணம் வசூலித்து அவர் ஏமாற்றியதாகவும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.