மதுரை வைகை கரையோர சாலையில் இளைஞர்கள் சிலர் தெப்பக்குளம் முதல் ஐராவதநல்லூர் வரை உள்ள சாலையில் பைக்கில் அதிக வேகமாக சென்று அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
மேலும் லுங்கி அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் செய்து நின்றபடி பயணம் செய்யும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.
இதை தவிர்க்க காவல் துறை சார்பாக நத்தம் மேம்பாலம் மற்றும் வைகை கரையோர சாலையில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் போலீசார் நியமிக்கப்பட்டும், அதையும் மீறி சில இளைஞர்கள் அத்துமீறி வருகின்றனர்.