​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெங்களூருவில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு... வீட்டிலிருந்து பணியாற்ற, பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்த பொது மக்கள் கோரிக்கை

Published : Mar 11, 2024 4:01 PM

பெங்களூருவில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு... வீட்டிலிருந்து பணியாற்ற, பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்த பொது மக்கள் கோரிக்கை

Mar 11, 2024 4:01 PM

பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்குமாறு கம்பெனிகளுக்கு உத்தரவிட முதலமைச்சர் சித்தராமையாவிற்கு சமூக வலைத்தளத்தில் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் இந்த வழி நல்ல பலன் அளித்தாகவும் பள்ளி, கல்லூரிகளும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டுமெனவும் பலரும் பதிவிட்டனர்.

பருவ மழை தொடங்கும் வரை பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்களில் தண்ணீர் செலவை இந்நடவடிக்கை குறைக்கும் என்றும் இந்த வசதியால் பல குடும்பங்கள் சொந்த ஊருக்கு செல்லக்கூடும் என்பதால் பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கலாம் எனவும் வலைத்தளங்களில் பலர் பதிவிட்டுள்ளனர்.