​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Published : Mar 11, 2024 11:11 AM

போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Mar 11, 2024 11:11 AM

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே மதுபோதையில் சாலைப் பணியாளரை வெட்டிக் கொன்று, தலைமைக் காவலரையும் அரிவாளால் தாக்கிய சம்பவத்தில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பேச்சித்துரை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பேச்சித்துரை, சந்துரு ஆகியோர் கடந்த 7ஆம் தேதி மதுபோதையில் சாலையில் வந்த காரின் கண்ணாடியை உடைத்து தகராறு செய்ததால், அதனை தட்டிக் கேட்ட கருப்பசாமி என்பவரை வெட்டி கொன்று அங்கிருந்து தப்பியுள்ளனர்.

தகவல் அறிந்து அவர்களை பிடிக்க சென்ற வீரவநல்லூர் தலைமைக் காவலர் செந்தில்குமார் என்பவரையும் வெட்டியதாக கூறப்படுகிறது.

இருவரையும் 3 தனிப்படைகள் தேடிவந்த நிலையில், சீதபற்பநல்லூரில் சந்துருவை கைது செய்த போலீசார் தப்பிக்க முயன்ற பேச்சித்துரையை காலில் சுட்டு பிடித்தனர்.