மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவுடன் ஓபிஎஸ் தரப்பு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
முதல்கட்டப் பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும் தங்களுக்கு விருப்பம் உள்ள தொகுதிகள் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
40 தொகுதிகளிலும் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழுவிடம் விருப்ப மனு பெறப்பட்டு அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளது என்றும் ஓபிஎஸ் கூறினார்.