தேனியில் நடைபெற்ற அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாநில நிர்வாகியை வரவேற்று தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரை ஒரு தரப்பினர் கிழித்து சேதப்படுத்தியதாகவும், மற்றொரு தரப்பினர் தர்ணாவில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.