​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நலத்திட்டங்கள் தொடங்கி வைப்பதை தேர்தலுடன் தொடர்பு படுத்தக்கூடாது: பிரதமர் மோடி

Published : Mar 10, 2024 5:46 PM

நலத்திட்டங்கள் தொடங்கி வைப்பதை தேர்தலுடன் தொடர்பு படுத்தக்கூடாது: பிரதமர் மோடி

Mar 10, 2024 5:46 PM

மக்களை ஏமாற்றும் வகையில் கடந்த தேர்தல்களின் போது வெற்று அறிவிப்புகளை வெளியிட்ட ஆட்சியாளர்கள், தேர்தலுக்குபின் காணாமல் போய் விட்டனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் அசம்கரில் விமான நிலைய திட்டங்களை தொடங்கி வைத்தபின் பேசிய அவர், தாம் பல்வேறு நிகழ்ச்சிகளில் நலத்திட்டங்கள் தொடங்கி வைப்பதை தேர்தலுடன் தொடர்புப்படுத்தி பார்க்கக்கூடாது என்றார்.

2019ஆம் ஆண்டில் தாம் அடிக்கல் நாட்டிய திட்டங்கள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறினார்.

2047ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த தேசமாக மாற்றும் நோக்கில் தாம் பணியாற்றி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.