​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போதைப்பொருள் விவகாரத்தில் உண்மையை மறைக்க தி.மு.க.வினர் நாடகம்: இ.பி.எஸ்

Published : Mar 10, 2024 4:11 PM

போதைப்பொருள் விவகாரத்தில் உண்மையை மறைக்க தி.மு.க.வினர் நாடகம்: இ.பி.எஸ்

Mar 10, 2024 4:11 PM

போதைப்பொருள் கடத்தலில் வந்த பணத்தை வைத்து தான் தி.மு.க. தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த இபிஎஸ், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக 7 பக்க புகார் மனுவை அளித்தார்.

 பின்னர் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, பல ஆண்டுகளாக பல நாடுகளுக்கு போதைப்பொருட்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஜாபர் சாதிக் கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

மடியில் கனம் இருப்பதால் தி.மு.க.விற்கு பயம் வந்துவிட்டதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.விற்கு அச்சமும், பதற்றமும் ஏற்படுவது ஏன்? என வினவினார்.