​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.1.13 கோடி மோசடி வழக்கில் தனியார் வங்கி முன்னாள் மேலாளர் கைது

Published : Mar 10, 2024 2:45 PM

ரூ.1.13 கோடி மோசடி வழக்கில் தனியார் வங்கி முன்னாள் மேலாளர் கைது

Mar 10, 2024 2:45 PM

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிரிபிரசாத் ராவ் என்பவரிடம், ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டி ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் வசூலித்து ஏமாற்றியதாக காக்களூர் எச்.டி.எப்.சி. வங்கி முன்னாள் மேலாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.

கிரிபிரசாத் ராவை போன்றே பலரிடம் ராஜ்குமார் 6 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.