ஹைதராபாதில் சுமார் மூன்றரை டன் போலியான இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனை பிரபல நிறுவனத்தின் பெயரால் தயாரித்து மளிகைக் கடைகளில் விற்பனை செய்து வந்தனர். இதன் மதிப்பு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள், வண்ணம் மற்றும் பசை போன்றவற்றால் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.