உத்திரப்பிரதேசத்தின் அஜம்கர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர், இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அப்போது காணொளி வாயிலாக லக்னோ விமானநிலையத்தின் மூன்றாவது முனையத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும் நாட்டின் 13 புதிய விமானநிலையங்களையும் அவர் காணொளி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நாளை குஜராத் செல்ல உள்ள பிரதமர் மோடி 10 வந்தே பாரத் ரயில்களையும் பல்வேறு நெடுஞ்சாலைகளையும் காணொளி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார்.
இதில் சென்னை பெங்களூர் வழித்தடத்திற்கு இரண்டாவது வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் மதுரையில் இருந்து இயக்கப்பட இருந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை-பெங்களூர் வழித்தடத்தில்வரவேற்பு அதிகமாக இருப்பதால் இரண்டாவது வந்தே பாரத் ரயிலும் அதே தடத்தில் இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக நேற்று காசியில் விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார்.