​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் இருந்து மாஸ்கோ பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட பாண்டா ஜோடிக்கு பிறந்த குட்டியை பார்வையிட அனுமதி

Published : Mar 09, 2024 5:47 PM

சீனாவில் இருந்து மாஸ்கோ பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட பாண்டா ஜோடிக்கு பிறந்த குட்டியை பார்வையிட அனுமதி

Mar 09, 2024 5:47 PM

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உயிரியல் பூங்காவின் நூறு ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக பிறந்த பாண்டா கரடி குட்டியை பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண் மற்றும் பெண் பாண்டா ஜோடிக்கு கடந்த ஆண்டு பிறந்த குட்டிக்கு கத்யூஷா அதாவது "பரிசுத்தம்" என பெயர் சூட்டப்பட்டது.

தற்போது மூன்று அடி உயரம் மற்றும் 16 கிலோ எடை கொண்டு பெண் பாண்டா குட்டியை குடும்பத்துடன் சென்று ரஷ்யர்கள் பார்த்து வருகின்றனர்