புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.
சென்னை பிரிவு மண்டல இயக்குநர் ரவிவர்மா தலைமையிலான குழுவினர் சிறுமிக்கு உடற்கூராய்வு நடைபெற்ற ஜிப்மர் மருத்துவமனை, முத்தியால்பேட்டை காவல் நிலையம், சிறுமியின் வீடு ஆகிய இடங்களில் விசாரணை நடத்தினர்.