​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட வேன் டிரைவரை 3 போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக வழக்குப்பதிவு

Published : Mar 09, 2024 12:05 PM

விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட வேன் டிரைவரை 3 போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக வழக்குப்பதிவு

Mar 09, 2024 12:05 PM

விபத்து விசாரணைக்கு சங்கரன் கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்தச் செல்லப்பட்ட வேன் டிரைவர் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வடக்குப்புதூர் கிராமத்தை சேர்ந்த வேன் டிரைவர் முருகன் சங்கரன்கோவில் நகரப் பகுதியில் விபத்து ஏற்படுத்தியதாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.