​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குமரியில் சொத்து பத்திரத்தை ரத்து செய்த தந்தையின் வாயில் விஷம் கலந்த மதுவை ஊற்றி கொன்ற மகனை போலீசார் கைது

Published : Mar 09, 2024 7:33 AM

குமரியில் சொத்து பத்திரத்தை ரத்து செய்த தந்தையின் வாயில் விஷம் கலந்த மதுவை ஊற்றி கொன்ற மகனை போலீசார் கைது

Mar 09, 2024 7:33 AM

குமரி மாவட்டம் குளச்சல் அருகே, சொத்து பத்திரத்தை ரத்து செய்த தந்தையை மது போதையில் தமது தந்தையை கண்மூடித்தனமாக தாக்கி, பிறகு அவரது வாயில் விஷம் கலந்த மதுவை வற்புறுத்தி ஊற்றி கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

கருத்து வேறுபாட்டால் மனைவி, குழந்தைகளை பிரிந்த சுனில் சிங், 85 வயதான தமது தந்தை வேதக்கண்ணு என்பவருடன் வசித்துவந்தார்.

மகன் மதுவுக்கு அடிமையாகி ஊதாரியாகத் திரிந்ததால், பேரக் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, மகன் பெயரில் எழுதி கொடுத்த சொத்து பத்திரத்தை வேதக்கண்ணு ரத்து செய்ததாக சொல்லப்படுகிறது.