​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஞ்ஞான ரீதியாக வளர்ந்தாலும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது- துணைநிலை ஆளுநர் தமிழிசை

Published : Mar 09, 2024 6:57 AM

விஞ்ஞான ரீதியாக வளர்ந்தாலும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது- துணைநிலை ஆளுநர் தமிழிசை

Mar 09, 2024 6:57 AM

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை சுட்டுத்தள்ள வேண்டும் என தாம் விருப்பப்பட்டாலும், சட்டத்தை பின்பற்ற வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்தார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை, பெற்றோர்கள் பெண் குழந்தைகளை போலவே ஆண் குழந்தைகளையும் கண்காணித்து, கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என்றார்.

விஞ்ஞான ரீதியாக சமூகம் எவ்வளவோ மாறியிருந்தலும், பெண்களுக்கு இன்னும் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.