​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்வுக்கு சரியாக படிக்காததால் கடத்தல் நாடகமாடிய பள்ளி மாணவிகள்.. அறிவுரை கூறி பத்திரமாக அனுப்பி வைத்த போலீஸ்..!!

Published : Mar 08, 2024 10:38 PM

தேர்வுக்கு சரியாக படிக்காததால் கடத்தல் நாடகமாடிய பள்ளி மாணவிகள்.. அறிவுரை கூறி பத்திரமாக அனுப்பி வைத்த போலீஸ்..!!

Mar 08, 2024 10:38 PM

சென்னை பூக்கடை காவல்நிலையம் அருகே நேற்றிரவு நின்றிருந்த பள்ளி மாணவிகள் 2 பேர், காரில் சிலர் கடத்தியபோது தப்பி வந்ததாக கூறியதை கேட்ட தாமோதரன் என்பவர் அவர்களை பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

சிறுமிகள் இருவரிடமும் தனித்தனியாக போலீஸ் நடத்திய விசாரணையில், ஆவடியைச் சேர்ந்த அவர்கள், தேர்வு நேரத்தில் சரியாக படிக்காததால் தற்கொலை முடிவெடுத்ததும், பின்னர் மனதை மாற்றிக்கொண்டு தோழியோடு சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. பெற்றோருக்கு தகவல் அளித்து வரவழைத்த போலீசார், மாணவிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பிவத்தனர்.