​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அர்மேனியா நாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு

Published : Mar 08, 2024 10:33 PM

அர்மேனியா நாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு

Mar 08, 2024 10:33 PM

அர்மேனியா நாட்டில் வேலைக்கு சென்று உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உதவி கோரி பெண் ஒருவர் மகன், மகளுடன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்தார்.

மேலூர் அருகே சின்ன கொட்டாம்பட்டியைச் சேர்ந்த அவரது கணவர் வீரதேவன் 2 முகவர்களிடம் 3 லட்சம் ரூபாய் கொடுத்து சுற்றுலா விசாவில் அர்மேனியாவுக்கு கம்பி கட்டும் வேலைக்கு சென்றதாகவும், வேலைக்கு அழைத்துச் சென்றவர் 8 மாதங்களாக பணி வழங்காததால், தாமாக வெளி வேலைக்கு சென்றபோது உயிரிழந்ததாகவும் வீரதேவனின் மனைவி தெரிவித்தார்.