​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிங்கப்பூரில் உயிரிழந்த கணவரின் முகத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்

Published : Mar 08, 2024 6:01 PM

சிங்கப்பூரில் உயிரிழந்த கணவரின் முகத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்

Mar 08, 2024 6:01 PM

சிங்கப்பூரில் உயிரிழந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது 6 வயது மகளுடன் மனு அளிக்க வந்த பேரரசி என்ற பெண் வழக்கறிஞர், தனது கணவரின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

மெக்கானிக்கல் இன்ஜினியரான சசிகுமார் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து 5ஆம் தேதி அன்று பேரரசியை தொடர்பு கொண்டு, சசிகுமார் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

7ஆம் தேதி அன்று மீண்டும் தொடர்பு கொண்டு, சசிகுமாரின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் ஊருக்கு அனுப்ப முடியாது என தெரிவித்து தொடர்பை துண்டித்து விட்டதாக பேரரசி தெரிவித்தார்.