​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகுதான், காஸா பகுதியில் இஸ்ரேல் பிணைக் கைதிகளும் பாலஸ்தீன சிறைக் கைதிகளும் விடுவிக்கப்படுவர்- ஹமாஸ்

Published : Mar 06, 2024 2:28 PM

போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகுதான், காஸா பகுதியில் இஸ்ரேல் பிணைக் கைதிகளும் பாலஸ்தீன சிறைக் கைதிகளும் விடுவிக்கப்படுவர்- ஹமாஸ்

Mar 06, 2024 2:28 PM

போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகுதான், காஸா பகுதியில் இஸ்ரேல் பிணைக் கைதிகளும் பாலஸ்தீன சிறைக் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் தெரிவித்தார்.

பெய்ரூட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறுவதுடன், போர் காரணமாக வெளியேறிய பாலஸ்தீனர்கள் மீண்டும் காஸாவுக்கு திரும்பி வந்தால் மட்டுமே அப்பகுதியில் அமைதி திரும்பும் என அவர் தெரிவித்தார்.

காஸா மக்களுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்புவதைவிட, இஸ்ரேல் ராணுவத்தின் அத்துமீறலையும், ஆயுத விநியோகத்தையும் நிறுத்தும்படி அமெரிக்காவை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.