​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொது கிணற்றில் தனி குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள் போலீஸ் இடையே தள்ளு முள்ளு

Published : Mar 06, 2024 1:57 PM

பொது கிணற்றில் தனி குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள் போலீஸ் இடையே தள்ளு முள்ளு

Mar 06, 2024 1:57 PM

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே 3 கிராமங்களுக்கு பொதுவான கிணற்றிலிருந்து ஒரு கிராமத்திற்கு மட்டும் தனியாக குடிநீர் குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற இரண்டு கிராம மக்கள் போராட்டம் நடத்த குவிந்ததால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அலவந்தான்குளம், பள்ளிக்கோட்டை, நெல்லைதிருத்து ஆகிய கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்ற அனுமதியுடன் அலவந்தான்குளத்திற்கு குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கியது..

புதியதாக மோட்டார் மற்றும் குழாய் பதிக்க வந்த அதிகாரிகளுடன் மற்ற இரு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தீக்குளிக்கவும் முயன்றதால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.