​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக பிரமுகர் வீட்டில் நகை பணம் கொள்ளையடித்த வழக்கில் தாய் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் கைது செய்யப்பட்டனர்

Published : Mar 06, 2024 6:45 AM

அதிமுக பிரமுகர் வீட்டில் நகை பணம் கொள்ளையடித்த வழக்கில் தாய் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் கைது செய்யப்பட்டனர்

Mar 06, 2024 6:45 AM

திருவண்ணாமலையில் கொள்ளையடித்த வழக்கில் தாய் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு எல்.இ.டி.டிவி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அதிமுக பிரமுகர் முருகனின் வீட்டில் இருந்து கடந்த 28ம் தேதி அதிகாலை   35 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்ச ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

10 பேர் கொண்ட இரண்டு தனிப்படைகளை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் சிவா, அமுதா ரஞ்சித்குமார் மற்றும் ஸ்ரீராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.