​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜவுளிக்கடை ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்த கட்டட உரிமையாளர்

Published : Mar 06, 2024 6:25 AM

ஜவுளிக்கடை ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்த கட்டட உரிமையாளர்

Mar 06, 2024 6:25 AM

திருமங்கலத்தில் ஜவுளிக்கடையை காலி செய்ய மறுத்த உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த கட்டட உரிமையாளர் கடைக்கு பூட்டு போட்டு வெல்டிங் வைத்ததாக ஜவுளிக்கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிக்கந்தர் பாட்ஷா என்பவர் விருதுநகர் - உசிலம்பட்டி செல்லும் சாலை சந்திப்பில் சாகுல் ஹமீது என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ரெடிமேட் ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார்.

அவர் வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

காலை கடையை திறக்க வந்த போது பூட்டை திறக்க முடியாமல் வெல்டிங் வைத்து இருப்பதைக் கண்டு புகார் அளித்துள்ளார்.