​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளைஞர்களை நம்பியே நாட்டின் எதிர்காலம்: மத்திய அமைச்சர்

Published : Mar 06, 2024 6:18 AM

இளைஞர்களை நம்பியே நாட்டின் எதிர்காலம்: மத்திய அமைச்சர்

Mar 06, 2024 6:18 AM

மக்கள் தொகையில் 63 சதவீதமுள்ள இளைஞர்களை நம்பி தான் நாட்டின் எதிர்காலம் உள்ளதாக மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதி உதவியோடு 40 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர், கல்வி நிறுவனங்களும் தொழிலகங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.