​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடக முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் முக்கிய இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்

Published : Mar 05, 2024 10:01 PM

கர்நாடக முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் முக்கிய இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்

Mar 05, 2024 10:01 PM

 கர்நாடகாவில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களிலும் குண்டு வெடிக்கும் என அம்மாநில முதலமைச்சர், உள்துறை அமைச்சர், பெங்களூரு காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வருகிற சனிக்கிழமை மதியம் 2.48 மணிக்கு பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள், பேருந்துகள், ரயில்களில் குண்டு வெடிக்கும் என்றும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பைத் தவிர்க்க 20 கோடி ரூபாய் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மிரட்டல் தொடர்பாக கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.