​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திண்டுக்கலில் குழந்தை கடத்தல்காரன் என நினைத்து இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Published : Mar 05, 2024 8:55 PM

திண்டுக்கலில் குழந்தை கடத்தல்காரன் என நினைத்து இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Mar 05, 2024 8:55 PM

திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் இளைஞர் ஒருவரை குழந்தை கடத்தல்காரன் என நினைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த வடமதுரை போலீஸார் அந்நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றிய போது சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்த வாகனம் திரும்பிச் சென்றது.

ஊராட்சிமன்றத் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அந்நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பிடிபட்ட நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.