​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேட்டூர் வலது, இடது கரை வாய்க்கால்களில் இந்தாண்டாவது தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published : Mar 05, 2024 3:56 PM

மேட்டூர் வலது, இடது கரை வாய்க்கால்களில் இந்தாண்டாவது தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Mar 05, 2024 3:56 PM

மேட்டூர் வலது மற்றும் இடது கரை வாய்க்கால்களில் இந்தாண்டாவது தண்ணீர் திறந்து விடக்கோரி ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்தாண்டு அவ்விரு வாய்க்கால்கள் திறக்கப்படாமல் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு உரிய பாசனம் கிடைக்கவில்லை என்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.