​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இஸ்ரேலில் ஹிஸ்பொல்லா தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்தவர் பலி.. தாக்குதலுக்கு பதிலடி தந்ததாக இஸ்ரேல் ராணுவம் தகவல்

Published : Mar 05, 2024 1:28 PM

இஸ்ரேலில் ஹிஸ்பொல்லா தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்தவர் பலி.. தாக்குதலுக்கு பதிலடி தந்ததாக இஸ்ரேல் ராணுவம் தகவல்

Mar 05, 2024 1:28 PM

இஸ்ரேலின் கலிலீ மாகாணத்தில் உள்ள மார்கலியோட் பகுதியில் லெபனானின் ஹிஸ்பொல்லா அமைப்பினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாட்னிபின் மேக்ஸ்வெல் என்பவர் உயிரிழந்தார்.

புஷ் ஜோசப் ஜார்ஜ், பால் மெல்வின் ஆகிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலில் வேறு சில நாடுகளைச் சேர்ந்த மேலும் 4 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.