​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆட்டோ பயணிகளிடம் செல்போன் திருடிய தாய் இரண்டு மகன்கள்.. பயணிகளின் கவனத்தைத் திசைதிருப்பி இதுவரை 39 செல்போன்கள் களவு

Published : Mar 05, 2024 9:56 AM

ஆட்டோ பயணிகளிடம் செல்போன் திருடிய தாய் இரண்டு மகன்கள்.. பயணிகளின் கவனத்தைத் திசைதிருப்பி இதுவரை 39 செல்போன்கள் களவு

Mar 05, 2024 9:56 AM

சென்னையில் ஆட்டோவில் ஏறும் பயணிகளின் கவனத்தைத் திசை திருப்பி ஒரே நாளில் 7 செல்போன்களைத் திருடிய தாய் மற்றும் 2 மகன்கள் போலீசாரிடம் சிக்கினர்.

இதுவரை அவர்கள் 39 செல்போன்களைத் திருடி ஏஜன்ட்டுகள் மூலமாக விற்றதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட ஷேர் ஆட்டோவில் பயணித்த பிறகு செல்போன்கள் காணாமல் போவதாக புகார் கூறப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஷேர் ஆட்டோவில் வந்த தாய் மற்றும் அவரின் 2 மகன்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ரமேஷ் என்பவர் ஆட்டோ ஓட்டும்போது பயணிகள் போல தாய் சுகுணா, மகன் பெருமாள் ஆகியோர் பின்னால் அமர்ந்து பயணிகளின் கவனத்தை திசைத் திருப்பி செல்போன் பறித்து வந்துள்ளனர்.