​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடரும் வெடிகுண்டு மிரட்டல் வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற முடிவு

Published : Mar 04, 2024 6:09 PM

தொடரும் வெடிகுண்டு மிரட்டல் வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற முடிவு

Mar 04, 2024 6:09 PM

சென்னையில் கடந்த 8-ம் தேதி ஒரே நாளில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்விடுத்த வழக்கில் குற்றவாளிகள் சிக்காத நிலையில், சென்னையில் 2 இடங்களிலும், கோவையில் ஓரு இடத்திலும் செயல்படும் பிஎஸ்பிபி பள்ளிக்கு இமெயில் மூலம் 2 நாட்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வரும் நிலையில் இன்று இதே பள்ளிகளுக்கு மீண்டும் இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது.