​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருமண நிச்சயம் செய்ய பெற்றோருடன் சென்ற இளம்பெண்ணை கடத்திய 7 பேர் கைது

Published : Mar 04, 2024 5:57 PM

திருமண நிச்சயம் செய்ய பெற்றோருடன் சென்ற இளம்பெண்ணை கடத்திய 7 பேர் கைது

Mar 04, 2024 5:57 PM

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரம் அருகே திருமண நிச்சயம் செய்ய குடும்பத்துடன் காரில் சென்ற  இளம் பெண்ணை , முகமூடி அணிந்து கத்தியுடன் வந்து காரின் கண்ணாடியை இரும்பு தடியால் அடித்து உடைத்து கடத்தியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதனிடையே, தலைமறைவான காதலனும்,இளம்பெண்ணும், திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை இளம் பெண்ணின் பெற்றோருக்கு அனுப்பி உள்ளனர்.  இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்த நிலையில் வேறு மாப்பிள்ளையுடன் நிச்சயம் செய்ய சென்றபோது, இளம்பெண்ணை காதலன் கடத்தியது தெரியவந்துள்ளது.