​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published : Mar 04, 2024 3:40 PM

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Mar 04, 2024 3:40 PM

போதைப் பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை தடுக்கத் தவறியதாகக் கூறி தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோயம்புத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையின் தலைமையில் திமுக அரசை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் கோட்டை மைதானத்தில் புறநகர் மாவட்டச் செயலாளர் மற்றும் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காமராஜர் சிலை அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை பெத்தானியாபுரத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு தலைமையில் திரளானோர் திமுக அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.