​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உப்புநீர் புகுவதை தடுக்க ரூ. 44 கோடியில் நீர் ஒழுங்குகள் அமைக்கப்படும் : மு.க. ஸ்டாலின்

Published : Mar 04, 2024 3:15 PM

டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உப்புநீர் புகுவதை தடுக்க ரூ. 44 கோடியில் நீர் ஒழுங்குகள் அமைக்கப்படும் : மு.க. ஸ்டாலின்

Mar 04, 2024 3:15 PM

டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உப்புநீர் புகுவதை தடுக்க 44 கோடி ரூபாய் மதிப்பில் நீர் ஒழுங்குகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தார்.

விழாவில் பேசிய அவர், அறிவிப்புகளை அரசாணைகளாக மாற்றி, அவை அமல்படுத்தப்படுவதையும் தமது அரசு கண்காணிப்பதாகக் கூறியுள்ளார்.

நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் என்ற திட்டம் மூலம்,தமிழக வரலாற்றிலேயே கிராமப்புற பட்டாக்களை கணினி மூலம் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.